நான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்

நேற்று மாலை திருப்பூர் வலை பதிவர்கள் சங்கமான சேர்தளம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து இருந்தது. நான் அவசர பணி காரணமாக கோவை சென்று விட்டதால், என்னால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை. நானும் எனது நண்பனும் செல்ல திட்டமிட்டோம், இறுதியில் அவன் மட்டும் சென்று வந்தான். எதிர்பார்த்த அளவு நபர்கள் விழாவிற்கு வரவில்லை என்று சொன்னான். நான் கூட பரிசல்காரனின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன்.
உலகின் பல இடங்களுக்கு சென்று வந்துள்ள அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக நண்பன் கூறினான். எனக்கு சிறிய வருத்தம் இன்னும் உள்ளது ஒரு அருமையான சந்தர்பத்தை இழந்து விட்டோம் என்று.

நேற்று மதியம் முதல் இன்று காலை வரை கோவையில் தான் இருந்தேன். கோவை எனக்கு பிடித்த நகரம். திருப்பூர் போல் பரபரப்பாக அல்லாமல் மிக நிதானமான நகரம், மற்றும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை எனக்கு பிடிக்கும். மற்றபடி கோவையில் எனக்கு அனுபவம் என்று எதுவும் இல்லை எப்போதாவது செல்வதோடு சரி. எனக்கு தெரிந்தவரை லிவிங் காஸ்ட் கோவையில் கொஞ்சம் அதிகம். அந்த வகையில் திருப்பூர் எவ்வளவோ பரவாயில்லை.
-------------------------------------------------------------------------------

0 comments: