என்னதான் நடக்குது இங்க?

" ஆரம்பத்தில் இருந்தே ஊழலை ஒழிப்பேன் என்று கூறியவர் எங்கள் தலைவர் விஜயகாந்த்"
- பிரேமலதா விஜயகாந்த்
" ஊழல் ஒழிப்பதற்கு தான் இந்த ரத யாத்திரை " - அத்வானி
" லோக்பால் மசோதா நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் " -
" ஊழலிற்கு எதிராக பாத யாத்திரை தொடங்கினார்" - பாபா ராம் தேவ்

இதெல்லாம் என்னனு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். இந்த ஊழல் ஒழிப்பு பத்தி இப்ப எல்லோரும் தீவிரமா பேசிட்டு இருக்காங்களே நாமளும் எதாவது பண்ணனும்னு ஆளாளுக்கு பேசிட்டு இருக்காங்க. எதுக்கு இதெல்லாம் இவ்ளோ நாளா எல்லாரும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க?. திடீர்னு ஏன் இவங்க இத பண்றாங்கனு ? மக்களும் திடீர்னு போராட்டம், உண்ணாவிரதம்னு இருந்தாங்க.

இத பத்தி எல்லாம் பேசும் போது இயக்குனர் .ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டில பேசும் போது சொன்னது. மக்களுக்கு பொறுமைனா என்னன்னு தெரியல, ஒரு டிராபிக் ரூல்ஸ் பாலோ பண்ண நினைப்பதில்லை, தனக்கு மட்டும்னு இருக்கற இவங்க எதுக்கு ஊழல், லோக்பால் னு பேசிட்டு இருக்காங்கனு.

இத பத்தி எல்லாம் பேசிட்டு போராட்டம்னு இருக்கறவங்க எல்லாம் அவுங்களோட சுய லாபத்திற்காக தான் பேசிட்டு இருக்காங்க. அரசியல்வாதிங்க இத அரசியலாக்கி தங்கள அடையாளபடுத்த நெனைக்கறாங்க. சில பேர் தங்கள ஹீரோ வாக காட்ட இத உபயோகபடுத்தறாங்க. ஒரு சட்டம் போட்ட மட்டும் ஊழல் ஒளிஞ்சுடும்னு நெனச்சுட்டு இருக்கறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம். உண்மைய சொல்லணும்னா எனக்கு அன்னா ஹசாரே யார்னு அவர் போராட்டம் நடத்த ஆரம்பிக்கற வரைக்கும் தெரியாது. அதுக்காக அவர செஞ்சது தப்புன்னு நான் சொல்ல வரல, அவருக்கு ஊழல் ஒழிக்க ஒரு கடுமையான சட்டம் வேணும் அதுக்கு நாம எதாவது பண்ணனும் தோணி இருக்கு, அது பெரிய ஆச்சர்யம் இல்ல. நம்ம நாட்டு மக்களுக்கு ஒட்டு மொத்தமா தோணுது இவ்ளோ நாள் ஏன் இவங்களுக்கு தோனலனு ஆச்சர்யம்தான்.

இத பத்தி நெறய எழுதலாம், ஆனா ஏற்கனவே நெறய எழுதிட்டாங்க. அது வேண்டாம் இப்ப நான் சொல்ல வந்தது என்னனா?
இந்த விஷயத்த உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் கூட விட மாட்டேன்கறாங்க. தங்களது பிரசுரங்களில் அன்னா ஹசாரே போட்டோ போட்டு சுயேட்சை வேட்பாளர்கள் அடையாளபடுத்த நினைக்கறாங்க. தங்களோட சுய விளம்பரத்திற்காக அரசியல்வாதிகள் இப்போது உபயோகபடுத்தும் பகடைதான் "ஊழல் எதிர்ப்பு " என்கின்ற ஒன்று.
இவ்ளோ நாளா தோணாத ஒரு விஷயம் அன்னா ஹசாரே போராட்டம் ஆரம்பிச்ச உடனே தான் எல்லோருக்கும் தோணுது .
ஒரு கடையில எம்.ஆர்.பி க்கு மேல பொருள் விற்பதை கேக்க துணிச்சல் இல்லாத மக்கள், எப்படி ஊழலுக்கு எதிரா போரடுவாங்க.
ஒருத்தன் ஒன்னு செய்யறான், அது எதுக்குன்னு யோசிக்காம ஆட்டு மந்தை மாதிரி அவன் செய்யறது செஞ்சுட்டு, அப்பறம் வேற ஒன்னு செய்யும் போது இத மறந்துட்டு அதை செய்வாங்க.
அதை எல்லாம் விட்டுட்டு இனியாவது திருந்துங்க மக்களே..........

0 comments: