நொய்யலின் தாண்டவம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் நொய்யல் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல உயிர்கள் பலியானதும், ஆயிரக்கணக்கான மக்கள் உடைமை இழந்து வாடுவதும் அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.
மக்களுக்கு உதவிகள் வந்தாலும் என்னை கோபப்பட வைத்த செய்தி. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தந்த நிதிதான். கிட்டத்தட்ட மூன்றாயிரம் உறுப்பினர்களை கொண்ட சங்கம். ஏறத்தாழ அனைவரும் கோடிகளில் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அளித்த உதவித்தொகை வெறும் ஒரு லட்சம்.
நடுத்தர, ஏழை மக்கள் கூட தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் உற்றார் உறவினருக்கு செய்து வருகின்றனர். இந்த நிலைமையில் இப்படி ஒரு பேருதவி செய்து இழிவை தேடிக்கொண்டனர் ஏற்றுமதியாளர்கள்.

உதவ விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு இந்த பதிவின் மூலம் கேட்டு கொள்கிறேன்.

0 comments: